212. பக்தஜனேஸ்வரர் கோயில்
இறைவன் பக்தஜனேஸ்வரர், நாவலீஸ்வரர்
இறைவி சுந்தரநாயகி, மனோன்மணியம்மை
தீர்த்தம் சக்கரத் தீர்த்தம்
தல விருட்சம் நாவல் மரம்
பதிகம் சுந்தரர்
தல இருப்பிடம் திருநாவலூர், தமிழ்நாடு
வழிகாட்டி விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை சாலையில் திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் எதிரே பிரிந்து செல்லும் சாலையில் 2 கி.மீ. சென்று 'திருநாவலூர் - சுந்தரர் அவதாரத் தலம்' கைகாட்டியின் எதிரே சென்றால் கோயிலை அடையலாம். பண்ருட்டியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.
தலச்சிறப்பு

Tirunavalur Gopuramமூலவரும், அம்பாளும் சிறிய வடிவில் காட்சி அளிக்கின்றனர். அம்பாள் சன்னதி வெளிப்பிரகாரத்தில் தனியாக உள்ளது. பங்குனி மாதம் 23 முதல் 27ம் தேதி வரை சூரிய ஒளி இறைவன் மீது விழுகிறது. அர்த்த மண்டபத்துக்கு முன் உள்ள பிரகாரத்தில் நவக்கிரக சன்னிதி அருகில் சுக்கிரன் வழிபட்ட சுக்கிரலிங்கம் உள்ளது.

Tirunavalur Sundararசுந்தரமூர்த்தி சுவாமிகள் அவதாரத் தலம். அவரது பெற்றோர்களான சடைய நாயனார்-இசைஞானியார் தம்பதிகள் திருத்தொண்டாற்றிய தலம். கோயிலுக்கு உள்ளே இடப்பக்கத்தில் சுந்தரர், பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் உடன் காட்சி தருகிறார். கோயிலுக்கு அருகில் சுந்தரர் மடாலயம் உள்ளது. தற்போது (2015) புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நரசிங்க முனையரைய நாயனார் அவதரித்த தலம். உள்பிரகாரத்தில் அவர் பூசித்த மிகப்பெரிய சிவலிங்கம் உள்ளது.

Tirunavalur Praharamகோயிலுக்குள் வடக்கு பிரகாரத்தில் தனியாக வரதராஜர் சன்னதி உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஒரு பதிகம் பாடியுள்ளார். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். தொடர்புக்கு : 94861 50804, 04149-224391

Back

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com